Tuesday, February 17, 2009

உன் அரும்பு முகம்!!!



நினைவு இருக்கிறதா??
அந்த பெண் பார்க்கும் படலம்
உனக்கோ பதினேழு
எனக்கோ இருபத்தி ஒன்று இருக்கும்
புதிதாய் சேலை உடுத்தி இருந்தாய்
கால் விரல் நுனி முதல்
கேசம் வரை நான் உன்னிலே அலச
என் ஆண்மையின் வெம்மை தாளாமல்
வெட்க பின்னல்கள் உன்னில் தெறித்து
படர விட்டிருந்தாய் பார்வையை தரையில்
சற்றே ஏமாற்றததுடன்.............

சம்மதம் தெரிவித்து நான் செல்கையில்
ஜன்னல் ஓரமாய் நின்று
என் முதுகு மட்டுமே பார்த்ததாய்
பின் ஒரு பனி காலத்தில் சொன்னாய்....

திருமணமான பல மாதங்களுக்கு
ஒற்றை வார்த்தையிலே பதில் சொன்னாய்
பெரும் பயம் கொண்டவளாய்.........

முதல் பிரசவததிற்கு
என்னை பிரிய முடியாது என
கதறி கதறி பிடிவாதம் பிடித்து
பெற்று கொண்டாய் பிள்ளையை
புகுந்த வீட்டிலேயே - சம்பிரதாயம் உடைத்து !

வேலை பளுவிலே நான் தொலைந்து போக
வார்த்து எடுத்தாய் குழந்தைகளை
ஊரார் மெச்ச நீ மட்டுமாய்....

ஆளாக்கி விட்ட பிள்ளைகள்
அங்காங்கே அயல் நாட்டிலே தஞ்சமாக
வெறுமையோடு உன்னை நோக்கி உணர்ந்தேன்
தொலைத்தது உன்னை உம், நாம் வாழ்க்கை உம்.....

நோய் உற்ற போது மருத்துவச்சியாய்
காமமும், காதலும் தேடிய போது மனைவியாய்
அயர்ச்சி அடைந்த போது அழகிய குழந்தையாய்
அறிவு தடுமாறிய போது ஆசிரியையாய்
அன்பை அள்ள தந்த அன்னையாய்
உன் ஓர் உடலுக்குள் தான்
எத்தனை எத்தனை வடிவங்கள்

அத்தி பூததது போல்
ஆண்டுக்கு ஓர் முறை வரும்
பேர பிள்ளைகளை ஓடி பிடித்து
உணவு புகட்டி, கதை சொல்லி
தூங்கி போன உன் தளர்ந்த முகம்
நான் விம்மி நோக்கிய போது
ஏனோ நியாபகம் வந்தது
ஆசையாய் எனை திருடிய
உன் அரும்பு முகம்!!!!

1 comment: