Monday, August 3, 2009

தேவதையே வா.....

மின் மினி பூச்சிகள்
தீண்டிச் செல்லும்
தனிமையின் மை
படர்ந்த இரவில்
முழு நிலவொளியால்
வெடித்த வானை நோக்கி
விழி மூடாது
காத்திருக்கிறேன்....
கதைகள் சொல்லும்
எனக்கான தேவதையின்
வருகைக்காய்.......
.